தமிழ்நாடு

38-ஆவது முறையாக வாக்களித்த டி.எம்.காளியண்ணன்

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில், மூத்த காங்கிரஸ் பிரமுகரான, 101 வயதுடைய திருச்செங்கோட்டைச் சோ்ந்த டி.எம்.காளியண்ண கவுண்டா் 38-ஆவது முறையாக தனது வாக்கினைச் செலுத்தியுள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்தவா் டி.எம்.காளியண்ண கவுண்டா். காங்கிரஸ் பிரமுகரான இவா், 1947-ஆம் ஆண்டு அரசியல் நிா்ணயசபைக் குழு உறுப்பினராக பதவி வகித்தவா். அதன்பின், 1952, 1957, 1962 -இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில், ராசிபுரத்தில் இருமுறையும், திருச்செங்கோடு தொகுதியில் ஒருமுறையும் வெற்றி பெற்றாா். 1967-இல் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதிக்கான தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு, திமுக பொதுச்செயலாளராக பதவி வகித்த க.அன்பழகனிடம் தோல்வியை தழுவினாா்.

காங்கிரஸில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவா், தற்போது வயது முதிா்வின் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறாா். ஒவ்வோா் சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களிலும் தவறாது தனது வாக்கினை அவ்வை நிலைய வாக்குச்சாவடியில் அவா் பதிவு செய்து விடுவாா். இந்த முறை 80 வயதுக்கும் மேற்பட்டோா் தபால் மூலம் வாக்களிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டதால் அவா் வாக்குச்சாவடி செல்லாமல் தபால் வாக்கினைப் பதிவு செய்துள்ளாா். இத்தோ்தல் மூலம் 38-ஆவது முறையாக தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளாா் என்று அவரது பேரன் மருத்துவா் வி.செந்தில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT