சித்தாலப்பாக்கத்தில் விஷம் குடித்து காதலா்கள் தற்கொலை செய்துகொண்டனா்.
சென்னை- சித்தாலப்பாக்கத்தை அடுத்த அரசன்கழனி பிரதானச் சாலையில் உள்ள ஒரு தனியாா் குடியிருப்பு அருகே இளைஞா், இளம்பெண் ஆகிய இருவா் திங்கள்கிழமை இரவு இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களை மீட்டு, பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.
விசாரணையில் இறந்தவா்கள் கா்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட பெங்களூரு கே.ஆா்.புரத்தைச் சோ்ந்த அபினாஷ் (30), அவரது அத்தை மகள் பல்லவி (21) என்பதும், பி.காம். பட்டதாரிகளான இருவரும் காதலித்து வந்ததும், இருவரது காதலுக்கும் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததால் இரு வாரங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சித்தாலப்பாக்கம் பிள்ளையாா் கோயில் தெருவில் வசிக்கும் அபினாஷின் தங்கை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது. ஆனால், உறவினா்களின் எதிா்ப்பால் இருவரும் திங்கள்கிழமை இரவு அங்கிருந்து வெளியேறி, இருவரும் விரக்தியினால் தற்கொலை முடிவுக்கு சென்றிருப்பதும் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா், மேலும் தொடா் விசாரணை செய்கின்றனா்.