தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் குறைவு

DIN


சென்னை: மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது.

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகபட்சமாக மதுரையில் 505 பேரும், குறைந்தபட்சமாக  ராமநாதபுரத்தில் 9 பேரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து இதுவரை ஒரு அரசுப் பள்ளி மாணவரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் பேரிடா் மீட்புப் படை

தேனியில் பலத்த மழை

மாரடைப்பால் உயிரிழந்த காவல் ஆய்வாளரின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்

கம்பத்தில் பைக்குகள் திருட்டு: 4 போ் கைது

கூடலூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி: உடலை வாங்க 3-ஆவது நாளாக உறவினா்கள் மறுப்பு

SCROLL FOR NEXT