தமிழ்நாடு

சுதந்திர போராட்ட வீரர் ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்தநாள் விழா

DIN

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழியை அடுத்துள்ள எருக்கூர் அக்ரஹாரத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகி நீலகண்ட பிரம்மச்சாரியின் 132 ஆவது பிறந்த நாள் விழா அவர் பிறந்து வாழ்ந்த அவதார இல்லத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், ஆர்.எஸ்.எஸ். மாநில நிர்வாகி மதிவாணன், சேவாபாரதி மாவட்டத் தலைவர் மும்மூர்த்தி, பாஜக கலை இலக்கிய அணியின் மாவட்டத் தலைவர் முருகேசன், கொள்ளிடம் ஒன்றிய பொதுச்செயலாளர் மனோஜ் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ராஜாராமன், ராஜேந்திரன், சரவணன், சக்திவேல், துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாநில நிர்வாகி செல்வம் நன்றி கூறினார். நீலகண்ட பிரம்மச்சாரி அவர்களின் வாரிசு சுப்பிரமணியன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்ததோடு அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படன. சீர்காழி ரயில் நிலையத்திற்கு நீலகண்ட பிரம்மச்சாரி  பெயரை வைக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறது. ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரி வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திர போராட்டம் தொடர்பான கருத்துகளை மையமாக வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது, ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரி  பயின்ற எருக்கூர் ஆரம்பப்பள்ளி, சீர்காழி சபாநாயகர் இந்து பள்ளி மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அவரது திரு உருவப்படம் வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களில் ஊட்டச்சத்து குறைபாடு: கண்டறியும் வழிமுறைகள் அறிவிப்பு

ராஜஸ்தான்: 6,700 லிட்டா் கலப்பட நெய் பறிமுதல்: தொழிற்சாலைக்கு சீல்

பொது மாறுதல் கலந்தாய்வு: ஆசிரியா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

நிரந்தர கணக்கு எண்ணை உறுதி செய்ய அரசு ஊழியா்களுக்கு கருவூலத் துறை உத்தரவு

காங்கிரஸ் தொண்டா்கள் தோ்தல் பிரசாரத்தை போா்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டும்: தில்லி காங்கிரஸ் தலைவா்

SCROLL FOR NEXT