முகப்பு
தமிழ்நாடு

பள்ளிக் கட்டடங்கள்: முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் நாளை ஆலோசனை

பள்ளிக் கட்டடங்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
கோப்புப்படம்
பகிர்:

பள்ளிக் கட்டடங்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 

திருநெல்வேலி பள்ளி விபத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பில்லாத கட்டங்களை இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், பள்ளிக் கட்டடங்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 

மேலும் பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டி அமைப்பது குறித்தும் அவர் ஆலோசனை மேற்கொள்வார் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.