இடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை: தொழிற்சங்கம்
தமிழக அரசு அறிவித்துள்ள இடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள இடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை இறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (பிப்.25) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.
இதனிடையே போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.1000 இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்தார்.
Advertisement
Advertisement
இதனால் வேலைநிறுத்தப் போராட்ட முடிவை கைவிட்டு ஊழியர்கள் நாளை பணிக்கு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள இடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் இடைக்கால நிவாரணம் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், நாளை (பிப்.25) திட்டமிட்டபடி பேருந்து போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.