முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டத்தில் 62% பேருந்துகள் இயக்கப்படவில்லை

தொமுச, சி ஐ டி யு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் 14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை இறுதி செய்ய வலியுறுத்தி,  வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 25 பிப்ரவரி, 2021 at 11:49 AM
 விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை இயக்கப்பட்ட தனியார் பேருந்துகள்.
பகிர்:


தொமுச, சி ஐ டி யு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் 14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை இறுதி செய்ய வலியுறுத்தி,  வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாவட்டத்தில் விருதுநகர் சிவகாசி சாத்தூர் திருத்தங்கல் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் அருப்புக்கோட்டை காரியாபட்டி முதலான அரசு போக்குவரத்து கழக பேருந்தும் அணைகளிலிருந்து தினமும் 362 பேருந்துகள் இயக்கப்படும். இப்போராட்டம் காரணமாக காலை 10 மணிவரை 38 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. 62 சதவீத பேருந்துகள் போராட்டம் காரணமாக இயக்கப்படவில்லை. 

இதன் காரணமாக பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் அவதிப்பட்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.