தமிழ்நாடு

அவிநாசியில் இருசக்கரவாகனம் - கார் மோதல்: இளைஞர் பலி

DIN

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் திங்கள்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். 

திருப்பூர் மாவட்டம், அவிநாசி செம்பியநல்லூர் வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (23), பெட்ரோல் பங்க் ஊழியர். இவரது நண்பர் நந்தகுமார் (23). இந்நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் அவிநாசி அன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். வெள்ளியம்பாளையம் அருகே சென்றபோது போது எதிரே வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

இதில் தலையில் பலத்த காயமடைந்த வினோத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த நந்தகுமார் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவிநாசி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'ஊழலை நீக்கும் வாஷிங் மெஷின்' - பாஜகவைக் கிண்டலடிக்கும் ஆம் ஆத்மி!

‘தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன..’: ஜி.வி.பிரகாஷ்

பம்பை: வாகன நிறுத்தத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

டைம்ஸ் உயா்கல்வி நிறுவனத் தரவரிசை: 168 ஆவது இடத்தில் கேஐஐடி பல்கலைக்கழகம்

SCROLL FOR NEXT