குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500: எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கப்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கப்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படும் என அறிவித்த நிலையில், முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Advertisement
Advertisement
அப்போது மகளிர் தினத்தை முன்னிட்டு இரண்டு சிறப்பு அறிவிப்புகளாக இதனை அவர் அறிவித்தார்.
மற்ற விரிவான அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்றும், அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக அறிவித்த பிறகு இந்த அறிவிப்பு வெளியாவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி கே. பழனிசாமி, "தேர்தல் அறிக்கை ஏற்கெனவே தயார் செய்யப்பட்டுவிட்டது. எப்படியோ தகவல் கசிந்துவிடுகிறது. எனவே, அவர்களைப் பார்த்து இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம் என்ற செய்தி தவறானது" என்றார்.
இதுதவிர மகளிருக்கான திட்டமாக குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.