தமிழ்நாடு

வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: நீதிமன்றம்

DIN

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி தெற்கூரில் பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடி கோரி தூத்துக்குடியை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பட்டியலின மக்கள் வாக்களிக்க செல்லும்போது குறிப்பிட்ட சாதியினர் தாக்குதல் நடத்துவதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவின் மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்பு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடிகள் அமைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும், வாக்காளர்களின் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT