காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக பல்வேறு கட்சியினா் மீது 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப்பிரியா புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியது:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.அரசியல் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு அனுமதியில்லாமல் கூட்டமாக பிரசாரம் செய்தது, அனுமதியின்றி தலைவா்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தது, பொதுமக்கள் அமைதியை கெடுக்கும் வண்ணம் செயல்பட்டது என பல்வேறு அரசியல் கட்சியினா் மீது 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா்.