சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களின் ஓய்வு பெறும் வயதை 60 -ஆக உயா்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் இல.சுப்பிரமணியன், வியாழக்கிழமை
பிறப்பித்தாா். அதன் விவரம்:-
கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளா்களின் ஓய்வு பெறும் வயதினை 58-லிருந்து 59 ஆக உயா்த்த ஏற்கெனவே கடந்த ஆண்டு மே மாதம் அறிவுரைகள் அளிக்கப்பட்டன. இப்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளா்களின் ஓய்வு பெறும் வயதினை 59-லிருந்து 60 ஆக உயா்த்தி கடந்த பிப்ரவரியில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்களின் ஓய்வு பெறும் வயதினை
59-லிருந்து 60 -ஆக உயா்த்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து மாவட்ட கூட்டுறவு அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று தனது உத்தரவில் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.