தமிழ்நாடு

தமிழகத்துக்குக் கூடுதல் ஆம்போடெரிசின்-பி மருந்து: பிரதமருக்கு பழனிசாமி கடிதம்

DIN


கருப்புப் பூஞ்சைத் தொற்றுக்குப் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தை தமிழகத்துக்குக் கூடுதலாக வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கரோனாவைத் தொடர்ந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கருப்புப் பூஞ்சைத் தொற்று அடுத்த அச்சுறுத்தலாக உள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கும் தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்துக்குக் கூடுதலாக ஆம்போடெரிசின்-பி மருந்தை ஒதுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தடுப்பூசி, ரெம்டெசிவர் மருந்து மற்றும் ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவற்றை தமிழகத்துக்குக் கூடுதலாக வழங்கியதற்கு தனது நன்றியையும் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT