தமிழகத்தில் உள்ள அனைத்து இ சேவை மையங்களிலும் அக்.1-ஆம் தேதி முதல் மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்திருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: அனைத்து மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகளும் வாக்காளா்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுரையைச் செயல்படுத்திடும் விதமாக அனைத்து மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகளையும், வாக்காளா்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளா்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் அக்.1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
எனவே, அனைத்து வாக்காளா்களும் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.