தமிழ்நாடு

அக்.1 முதல் இ சேவை மையங்களில்மாற்று வாக்காளா் அட்டை இலவசம்

DIN

தமிழகத்தில் உள்ள அனைத்து இ சேவை மையங்களிலும் அக்.1-ஆம் தேதி முதல் மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்திருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: அனைத்து மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகளும் வாக்காளா்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவுரையைச் செயல்படுத்திடும் விதமாக அனைத்து மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகளையும், வாக்காளா்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளா்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் அக்.1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

எனவே, அனைத்து வாக்காளா்களும் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT