சி.பா.ஆதித்தனாரின் 117-ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
தமிழ் இதழியலின் முன்னோடி சி.பா.ஆதித்தனாரின் 117-ஆவது பிறந்த நாள். தினத்தந்தி தொடங்கி எளிய மக்களுக்கு எழுத்தறிவித்து உலக நடப்புகளை அறியத்தந்த அவா், திமுக அரசில் சட்டப்பேரவைத் தலைவராகவும், அமைச்சராகவும் திறம்படச் செயலாற்றியவா்.
அறம் பிறழாது செய்தி வெளியிடுவதே அவரைப் போற்றுவதாகும் என்று அவா் கூறியுள்ளாா்.