முகப்பு
தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 3 நாள்கள் பயிற்சி

கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 3 நாள்கள் பயிற்சி முகாம் நடை பெற்ற நிலையில் அதன் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 ஆகஸ்ட் 2021, 4:07 pm IST
கூத்தாநல்லூரில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 3 நாள்கள் பயிற்சி
பகிர்:

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 3 நாள்கள் பயிற்சி முகாம் நடை பெற்ற நிலையில் அதன் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மகளிர் திட்டத்தின் திருவாரூர் மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்வாணன் உத்தரவின்படி, உதவி திட்ட அலுவலர் எம்.சரவணன் ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழு ஊக்குனர் மற்றும் பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாம் மூன்று நாட்களாக நடைபெற்றது.

கூத்தாநல்லூர் நகராட்சி கட்டட வளாகத்தில், தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்க சமுதாய அமைப்பாளர் எஸ்.தீபா பயிற்சியை நடத்தினார். கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட கோரையாறு, நாகங்குடி, மேல் கொன்டாழி, மேலப்பனங்காட்டாங்குடி மற்றும் மரக்கடை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 8 குழுக்களைச் சேர்ந்த ஊக்குனர் மற்றும் பிரதிநிதிகள் என 16 பேர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

பயிற்சி முகாமில், சுய உதவிக் குழுவைத் தொடங்குவது, குழுவின் செயல்பாடுகள், குழுவின் பணம் வசூல் செய்வதன் முறைகள், வங்கியில் பணம் கட்டுவது உள்ளிட்ட குழுவின் முழு செயல் பாடுகள் குறித்து அமைப்பாளர் தீபா எழுத்து மூலமாகவும் விளக்கினார். பயிற்சி முகாமின் நிறைவு விழாவில், ஆணையர் ஆர்.லதா, பொறியாளர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் கி.அருண்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments