கரோனா குறைந்தாலும் முகக்கவசம் அணிய வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. பாதிப்பு குறைந்துள்ள போதிலும் தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்
சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. பாதிப்பு குறைந்துள்ள போதிலும் தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன். கூறியுள்ளார்.
முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா தடுப்புப் பற்றி மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுருத்தியுள்ளார்.
கரோனாவை ஒழிப்பதே நோக்கம் என்றாலும் ஒரு சில மாவட்டங்களில் கவனம் தேவை என்றும், கரோனா ஒருநாள் பாதிப்பு 20 ஆக குறைந்துள்ள போதிலும் தற்போது ஆங்காங்கே சற்று உயர்ந்து வருகிறதாக ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.