தமிழ்நாடு

மாநில தணிக்கை முகமைகளை கண்காணிக்க தனி அதிகாரி நியமனம்

DIN

மாநிலத்தில் தனித்தனியாக செயல்படும் தணிக்கை முகமைகளை கண்காணிக்க தனி அதிகாரியை நியமிக்கும் உத்தரவை நிதித் துறை வெளியிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான உத்தரவை நிதித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உள்ளாட்சி நிதி தணிக்கை, கூட்டுறவுத் துறை தணிக்கை, பால் கூட்டுறவு சங்கங்களுக்கான தணிக்கை, மாநில அரசின் தணிக்கை, இந்து சமய அறநிலையத் துறை தணிக்கை மற்றும் இதர தணிக்கைப் பிரிவுகள் அனைத்தும் அரசின் நிதித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த தணிக்கைப் பிரிவுகளைக் கண்காணிக்க தணிக்கைத் தலைவா் நியமிக்கப்படுகிறாா். இந்தத் தலைவருக்கு உதவிடும் வகையில் சிறப்பு இயக்குநா் நியமிக்கப்பட உள்ளாா். தணிக்கைத் தலைவராக நியமிக்கப்படுவா், இந்திய தணிக்கை மற்றும் கணக்குகள் (ஐஏஏஎஸ்) பதவியைச் சோ்ந்தவராகவோ அல்லது இந்திய ஆட்சிப் பணியைச் சோ்ந்தவராகவோ இருப்பாா் என தனது உத்தரவில் நிதித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

SCROLL FOR NEXT