தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போக்குவரத்துக் கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்குவதற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளி போக்குவரத்துக் கழகம் சார்பில் கோரப்பட்டுள்ளதையும் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தானியங்கி பயணச்சீட்டு முறை மெட்ரோ ரயில், பிற பணப் பரிமாற்ற நிறுவனங்களுடன் இணைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.