தமிழ்நாடு

டிச. 7ல் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு காரணமாக வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு காரணமாக வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிச. 5-இல் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும் என்றும் பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து டிச. 8-ஆம் தேதியை ஒட்டி தமிழக - புதுவை கடலோரப்பகுதிகளின் அருகில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக வருகிற டிசம்பர் 7 ஆம் தேதி வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT