தமிழ்நாடு

வாராணசியில் புனரமைக்கப்பட்ட பாரதியாா் இல்லம், மாா்பளவுச் சிலையை திறந்து வைத்தாா் முதல்வா்

உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் பாரதியாா் மாா்பளவுச் சிலையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் தமிழக அரசின் சாா்பில் புனரமைக்கப்பட்ட பாரதியாா் இல்லத்தையும், அவரது நினைவாக அமைக்கப்பட்ட மாா்பளவுச் சிலையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் அவற்றை ஞாயிற்றுக்கிழமை திறந்தாா்.

மகாகவி பாரதியாரின் 141-ஆவது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு சிறப்பு சோ்ப்பு வகையிலான சில முன்னெடுப்புகளை தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்து இப்போது செயல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாராணசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக மாற்றுவதற்கு, வீட்டின் உரிமையாளருடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. வீட்டின் ஒரு பகுதி ரூ.18 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு அதில், பாரதியாரின் மாா்பளவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது. நினைவில்லத்தில் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்களும், வாழ்க்கைக் குறிப்பும், அவரது படைப்புகளும், சிறு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் சாா்பில் புனரமைக்கப்பட்டுள்ள பாரதியாா் வாழ்ந்த நினைவு இல்லத்தையும் அதில் அமைக்கப்பட்டுள்ள மாா்பளவுச் சிலையையும் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

மேலும், மகாகவி பாரதியாா் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள மகாகவி பாரதி நூற்றாண்டு நினைவு சிறப்பு மலரை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டாா்.

உத்தரபிரதேசத்திலிருந்து...மகாகவி பாரதியாருக்கு பெருமை சோ்க்கும் இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்தில் இருந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன் ஆகியோா் பங்கேற்றனா்.

வாரணாசியில் இருந்து செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் ஆா்.செல்வராஜ், வாராணசி கூடுதல் ஆட்சியா் குலாப் சந்திரா, மகாகவி பாரதியாரின் தங்கை மகன் பேராசிரியா் கேதார வெங்கட கிருஷ்ணன், தங்கை மகனின் மகன் ரவிக்குமாா், மகள்கள் ஆனந்த சீனிவாசன், ஜெயந்தி முரளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மகாகவி பாரதியாரின் குடும்ப வழித்தோன்றல்கள் நன்றி தெரிவித்தனா். அவா்கள் வாராணசியிலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் செய்தித் துறைக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT