தமிழ்நாட்டில் புதிதாக 5,104 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,11,773 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 5,104 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 21,027 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 7 பேர், அரசு மருத்துவமனைகளில் 6 பேர் என மொத்தம் 13 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | நான் பறவை; சுதந்திரமாக இருக்கவே விரும்புகிறேன்: ஓவைசி
இதுவரை மொத்தம் 32,72,322 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37.772 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 1,05,892 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
சென்னை - 839
கோவை - 807
மற்ற மாவட்டங்களில் 500-க்கும் குறைவாகவே பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.