இலங்கையில் கைதான தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கடந்த பிப்.24 ஆம் தேதி நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறைக்காவல் முடிந்து ஆஜரான 22 பேரையும் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.