முகப்பு
சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான லாரி.
தமிழ்நாடு

உரமூட்டை ஏற்றி வந்த லாரி சாலை தடுப்பில் மோதி விபத்து: பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மதுரையில் இருந்து கரூருக்கு உரமூட்டை ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு

உரமூட்டை ஏற்றி வந்த லாரி சாலை தடுப்பில் மோதி விபத்து: பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மதுரையில் இருந்து கரூருக்கு உரமூட்டை ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான லாரி.
பகிர்:


மதுரையில் இருந்து கரூருக்கு உரமூட்டை ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மதுரை பாலரங்காபுரம் லாரி குடோனில் இருந்து கரூருக்கு உரமூட்டை ஏற்றி வந்த லாரி அரசரடி பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை கவனிக்காத நிலையில், லாரி தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. 

தொடர்ந்து லாரியின் முன் பக்கம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. லாரி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சம்பவ இடத்திலேயே நின்றிருந்த நிலையில், குடோனில் இருந்து மாற்று லாரி வரவழைக்கப்பட்டு உர மூட்டைகளை இடமாற்றம் செய்த பிறகு லாரியை பொக்லைன் இயந்திரம் கொண்டு சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.

இதுதொடர்பாக மதுரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து லாரி விபத்துக்குள்ளான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →