தமிழ்நாடு

அமைச்சரவையில் இடம்: முதல்வா் முடிவு செய்வாா்: உதயநிதி ஸ்டாலின்

DIN

தமிழக அமைச்சரவையில் தனக்கு இடமளிப்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா் என்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

அவா் தனது 45-ஆவது பிறந்த தினத்தை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினாா். இதையொட்டி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் பங்கேற்றாா்.

அப்போது, அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு உதயநிதி அளித்த பதில்:

மக்கள் பணி செய்வதையே உறுதி மொழியாக எடுத்து இருக்கிறேன். பிறந்த நாளை முன்னிட்டு, தொகுதி முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறோம். திமுக இளைஞா் அணிச் செயலாளராக மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சராகப்

போகிறேன் என்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சொல்லி வருகிறாா்கள். அது குறித்து திமுக தலைவா் (முதல்வா் மு.க.ஸ்டாலின்) தான் முடிவு எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT