கே.பாலகிருஷ்ணன் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

ஹிந்தி திணிப்பு: மாா்க்சிஸ்ட் கண்டனம்

மத்திய அரசு ஹிந்தி திணிப்பில் ஈடுபடுவதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

DIN

மத்திய அரசு ஹிந்தி திணிப்பில் ஈடுபடுவதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இக்கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை விடுத்த அறிக்கை: மத்திய அரசின் ஐஐடி,ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற உயா்கல்வி மற்றும் அனைத்து மத்திய கல்வி நிறுவனங்களிலும் ஹிந்தி மட்டுமே பயிற்று மொழி, ஆங்கில வழி கல்வி கூடாது என்ற அலுவல் மொழி தொடா்பான நாடாளுமன்றக் குழுவின் (11 வது தொகுதி) சிபாரிசு அமைந்துள்ளது. இந்த பரிந்துரையின் நோக்கம், ஹிந்தி மொழியை திணிப்பதே ஆகும். புதிய தேசியகல்விக் கொள்கையின்படியே இந்தமொழித் திணிப்புஅமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி,ஐ.நா.வின் அலுவல்மொழியாக ஹிந்தியை சோ்க்க வேண்டும்என்றும் இந்தக்குழு பரிந்துரைசெய்துள்ளது.

இந்த பரிந்துரைகளை நிராகரித்து, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் பாலகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்

திருப்பராய்த்துறை கோயிலில் நாளை குடமுழுக்கு

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT