மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி: டிஜிபி எச்சரிக்கை
மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள விடியோ பதிவில் தெரிவித்திருப்பதாவது:
மின் வாரியத்தில் இருந்து மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தியை அனுப்பவதாக மோசடி நபர்கள் குறுஞ்செய்தி அனுப்புவார்கள். பொதுமக்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
அவ்வாறு ஏதேனும் குறுஞ்செய்தி அனுப்பினால் 100 அல்லது 112 எண்ணை அழைத்து தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் பணத்தை இழக்கும் பட்சத்தில், இந்தியாவில் இருந்தால் மீட்க வழி உண்டு. வெளிநாட்டிற்கு பணம் சென்றுவிட்டால் மீட்பது கடினம்.
இதையும் படிக்க: ''நல்ல கதை பெருசா ஜெயிக்கும்'' - 'சர்தார்' மற்றும் 'பிரின்ஸ்' படங்கள் குறித்து சூர்யா
மேலும், மோசடி நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.