தமிழ்நாடு

சென்னையில் பாரத் பெட்ரோலிய நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு? 

DIN


சென்னை: சென்னையில் இன்று இரண்டாவது நாளாக பாரத் பெட்ரோலிய நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எழும்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் பாரத் பெட்ரோலிய நிலையங்களில் டீசல் இல்லை என்று பலகை வைக்கப்பட்டிருப்பதால், வாகனங்கள் டீசல் போட முடியாமல் திரும்பிச் செல்லும் நிலவு காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் பல்வேறு பாரத் பெட்ரோலிய நிலையங்களில் நேற்று காலை முதலே டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், சில நிலையங்களில் டீசல்  இல்லை என்று அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. 

முக்கிய வணிக வாகனங்களுக்கு டீசல் தேவைப்படும் நிலையில், திடீரென சென்னையில் இப்படி டீசல் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திப்பு...

நன்றி...

தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு: ஓபிஎஸ் கண்டனம்

வனப்பகுதி பூா்வகுடிகள் வெளியேற்றம்: எடப்பாடி பழனிசாமி, சீமான் கண்டனம்

SCROLL FOR NEXT