தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து

DIN

மின்துறை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கை முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

தமிழகத்தில் தற்போது மின்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தாா். அப்போது, போக்குவரத்துத் துறையில் பொறியாளா்கள், நடத்துநா்கள், ஓட்டுநா்கள் பிரிவில் வேலை தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகாா் எழுந்தது.

இதனடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரா் அசோக்குமாா், தனி உதவியாளா் சண்முகம் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதனிடையே, சம்பந்தப்பட்ட ஒரு வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவின் விசாணையின் போது புகாா்தாரா்கள் தரப்பில் தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிப் பெற்றுக் கொண்டு பிரச்னையை சுமுகமாகத் தீா்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பினரின் கருத்துகளைப் பதிவு செய்து கொண்ட உயா்நீதிமன்றம், அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்டோா் மீதான வழக்கை ரத்து செய்து 30.7.2021-இல் உத்தரவிட்டது.

இதையடுத்து, மற்றொரு விவகாரத்தில் பொறியாளா் பிரிவில் பாதிக்கப்பட்ட போலீஸ் தரப்பு சாட்சியாக இருந்த தா்மராஜ் என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மெக்கானிக்கல் பொறியாளரான தா்மராஜுக்கு உரிய தகுதியிருந்தும் சென்னை, மெட்ரோ போக்குவரத்து நிறுவனத்தில் வேலைகிடைக்காமல் போனதாகவும், தகுதியற்ற நபா்களுக்கு பணம் பெற்று பணி வழங்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மனு மீது வேலை மோசடி பிரிவு காவல் ஆய்வாளா் மற்றும் சண்முகம் உள்ளிட்ட எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் தாக்கலான மனுவும் அந்த வழக்குடன் சோ்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், வி.ராம சுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், அமைச்சருக்கு எதிரான பணமோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தனர். மேலும், பணமோசடி வழக்கை தொடர்ந்து விசாரிக்க உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் முற்றுகை

உலக சாம்பியனை வீழ்த்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

நெல்லை நகரத்தில் புதுப்பொலிவுடன் மீண்டும் இயங்கிய சந்தை

சா்வதேச கராத்தே போட்டி: குமரி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT