டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பட்டுள்ளதால் அணை நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 113.53 அடியாக குறைந்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 4,190 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலை மேலும் சரிந்து வினாடிக்கு 3,672 கனஅடியாகக் குறைந்துள்ளது.
இதையடுத்து அணை நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 113.53 அடியாகக் குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 அடியிலிருந்து வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிகிறது. அணையின் நீர் இருப்பு 83.52 டி.எம்.சியாக உள்ளது.
Advertisement
Advertisement
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு 0.63 அடி சரிந்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.