பொதுக்குழுவை புறக்கணிக்க வேண்டும்: ஓ.பி.எஸ். வேண்டுகோள்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடிதம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
படிக்க | இபிஎஸ்ஸுக்கு வலுக்கும் ஆதரவு: ஓபிஎஸ் நிலை என்ன?
Advertisement
Advertisement
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையினரும் உயர்நீதிமன்ற உத்தரவுப் படி பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்றும், பாதுகாப்பு வழங்கக்கூடாது எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மனுவாக கோரிக்கை வைக்கப்பட்டது.
எனினும், உள் அரங்கில் கூட்டம் நடைபெறுவதால், அதற்கு தடை விதிக்க முடியாது என்றும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளது. இதனிடையே ஓபிஎஸுக்கு ஆதரவு அளித்து வந்த சில மாவட்ட செயலாளர்கள் இபிஎஸ் அணிக்குத் தாவி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் யாரும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளக் வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.