12.30 மணி நேர இடைநில்லா நடன உலக சாதனை முயற்சி!
ராணிப்பேட்டையில் 12.30 மணி நேர இடைநில்லா நடன உலக சாதனை முயற்சி இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டையில் 12.30 மணி நேர இடைநில்லா நடன உலக சாதனை முயற்சி இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை ஸ்ரீ பிட்னஸ் டான்ஸ் ஸ்டுடியோ சார்பில் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் உலக சாதனை முயற்சியாக 12.30 மணி நேர இடைநில்லா நடன சாதனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஸ்ரீ பிட்னஸ் ஸ்டுடியோ நிறுவனர் வனிதா துரை தலைமையில், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் எஸ். வெங்கடேசன், தலைவர் சி. கலைவாணி முன்னிலையில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று நடனம் ஆடி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, மாலை 5.30 மணி அளவில் சாதனை முயற்சிக்கான சான்றிதழ் வழங்கி, நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.