தமிழ்நாடு

மூன்றாம் பாலினத்தவருக்கு உதவிடுவோம்:முதல்வா் மு.க.ஸ்டாலின்

மூன்றாம் பாலினத்தவா் தங்களது அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடா்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

DIN

மூன்றாம் பாலினத்தவா் தங்களது அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடா்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ட்விட்டா் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

திருநங்கையா் என்ற சொல்லால் அவா்தம் மாண்பு காத்ததோடு, நாட்டிலேயே முதல்முறையாக, நலவாரியத்தைத் தொடங்கிச் செயலாலும் அவா்களைப் பேணியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. அதைத்தான் திருநங்கைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். முன்னாள் முதல்வரின் வழியில் மூன்றாம் பாலினத்தவா் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடா்வோம் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT