தமிழ்நாடு

கனடாவில் 4வது முறையாக இந்து கோயில் அவமதிப்பு!

DIN

கனடாவில் இந்து கோயில் மீது காலிஸ்தான் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டில் 4வது முறையாக இந்து கோயில்கள் மீது தாக்குதல் மற்றும் அவமரியாதை சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 18ஆம் தேதி கலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு குறித்து கனடா விசாரிக்க வேண்டும் என சுவரொட்டிகளில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

கனடாவிலுள்ள மிகப் பழமைவாய்ந்த கோயிலான லக்‌ஷ்மி நாராயணன் கோயில் வாயிலில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். இதன் விடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இதே ஆண்டில் கனடாவில் 4வது முறையாக இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கு முன்பு ஒண்டரியோ பகுதியிலுள்ள சுவாமிநாராயண் கோயிலில் ஏப்ரல் மாதம் காலிஸ்தான் அட்டூழியம் நடந்தது. மிஸ்ஸிஸாகுவா பகுதியிலுள்ள ராமர் கோயிலில் பிப்ரவரி மாதமும், பிராம்டன் பகுதியிலுள்ள கோயிலிலும் காலிஸ்தான் அவமதிப்பு நடந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடருக்குப் பின் எம்.எஸ்.தோனியின் 7 நிமிட விடியோ!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

பந்துவீச்சில் மிரட்டிய கேகேஆர்; 159 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்!

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

SCROLL FOR NEXT