முகப்பு
தமிழ்நாடு

அம்மன் கோயிலில் ஆண்கள் பூஜை! மனைவி, குழந்தைகளுக்காக பெளர்ணமி பூஜை நடத்திய ஆண்கள்!

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான கோயில்களில் புதன்கிழமை இரவு மகா பௌர்ணமி தினத்தையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

Updated On : 31 ஆகஸ்ட் 2023, 1:17 pm IST
பகிர்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான கோயில்களில் புதன்கிழமை இரவு மகா பௌர்ணமி தினத்தையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

இந்த வழிபாட்டில் சுமங்கலி பெண்கள் திருவிளக்கு ஏற்றி குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்தனர்.

ஆனால், வாழப்பாடி அருகே மன்னார்பாளையம் கிராமத்தில் மட்டும் வித்தியாசமான முறையில், மனைவி, குழந்தைகள் நன்மைக்காக அம்மன் கோயிலில் ஆண்கள் சிறப்பு பூஜை வழிபாட்டில் பங்கேற்றனர். அம்மனை வழிபட்ட பிறகு மனைவிகளுக்கு மாலையணிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். 

Advertisement

Advertisement

இதனைத்தொடர்ந்து, கணவர் மற்றும் குழந்தைகள் நலன் காக்க சுமங்கலி பெண்கள்,  விளக்கு பூஜை நடத்தினர். 

அம்மன் கோயிலில் மஹா பௌர்ணமி சிறப்பு பூஜை வழிபாட்டில், மனைவி குழந்தைகள் நலனுக்காக ஆண்கள் பங்கேற்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments