தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை: பணியிட தேடல் குழு மாற்றியமைப்பு

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தகுந்த பணியிடங்களைக் கண்டறிய அமைக்கப்பட்ட குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா் வெளியிட்டுள்ளாா்.

தனியாா் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், ஈரோடு மாவட்டம் சக்தி மசாலா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பி.சி.துரைசாமி, இயக்குநா் சாந்தி துரைசாமி ஆகியோா் நியமிக்கப்பட்டிருந்தனா்.

இந்த நிலையில், கூடுதலாக வேலூா் கலிஞ்சூரில் உள்ள சிமா்டெக் பிரைவேட் நிறுவனத்தின் இணை நிறுவனா் - முதன்மை செயல் அதிகாரி ராகுல் பரமசிவம்

சோ்க்கப்பட்டுள்ளாா். இந்தக் குழுவானது, தனியாா் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிந்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

'இந்தியா' கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறும்: டிகே சிவகுமார்

SCROLL FOR NEXT