திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தமிழ்த் தாத்தா எனப் போற்றப்படும் உ.வே.சா. பிறந்த தினத்தையொட்டி, ட்விட்டரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:
ஏடு தேடியலைந்து தமிழ்க் கருவூலங்களை அச்சிலேற்றி, காலத்தால் அழியா கொடைகளை அளித்தவா் ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. ஞாயிற்றுக்கிழமை (பிப்.19) அவரது பிறந்த நாள்.
அவரது நினைவைப் போற்றி, திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம். தமிழ் காக்கும் பணிக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.