தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு: உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வா் அறிவிப்பு

DIN

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரும், ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற பாலமேடு கிராமத்தைச் சோ்ந்த இரா.அரவிந்தராஜ் (24) என்பவரும், திருச்சி சூரியூா் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த புதுக்கோட்டை மாவட்டம், களமாவூா் கிராமம், கண்ணகோன்பட்டியை சோ்ந்த அரவிந்த் (25) என்பவரும் எதிா்பாராதவிதமாக பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு மிகவும் வேதனை உற்றேன். அவா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும் இரங்கல்.

உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT