குற்றால அருவிகளில் 2வது நாளாக காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இரண்டாவது நாளாக வியாழக்கிழமை நீடிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இரண்டாவது நாளாக வியாழக்கிழமை நீடிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் காட்டாற்று வெள்ளம் காரணமாக குற்றாலம் அருவியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தொடர் கனமழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட 5 முக்கிய அருவிகளிலும் தற்போது காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனால் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.