கோப்புப்படம் 
தமிழ்நாடு

மருத்துவப் படிப்பு: கல்லூரி பதிவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு!

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான மாணவர்களின் கல்லூரி பதிவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான மாணவர்களின் கல்லூரி பதிவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2023-24-ம் கல்வியாண்டிற்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் ஜூலை 12-ம் தேதி வரை பெறப்பட்டன. கடந்த ஜூலை 16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. 

மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு கலந்தாய்வு கடந்த 27-ஆம் தேதி சென்னை, கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.

இந்த நிலையில், எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கான மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாணவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீடு ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெறும் எனவும், ஆகஸ்ட் 6 ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்துக் கொண்டு, ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT