கோப்புப்படம் 
தமிழ்நாடு

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 4 நைஜீரியர்கள் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 4 நைஜீரியர்களை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

DIN

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 4 நைஜீரியர்களை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

பின்னல் நகரமான திருப்பூரில் நைஜீரியா, கென்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து இரண்டாம் தர பின்னலாடைகளை வாங்கி தங்களது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். 

அதிலும், குறிப்பாக ராயபுரம், ரயில் நிலையம், காதர்பேட்டை பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான நைஜீரியர்கள் தங்கியுள்ளனர். இதில், சிலர் கடவுச்சீட்டு, விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பதாக திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. 

இதன் பேரில் ராயபுரம் பகுதியில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் உபா(43), ஒபின்னா(32), அஃபாம் பாஸ்கல்(32), ஜான்பால் (34) ஆகிய 4 பேரும் சட்டவிரோதமாக உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்தது  தெரியவந்தது. 

இதையடுத்து, அவர்களைக் கைது செய்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மிகப்பெரியளவில் கேள்விக்குறியாகி உள்ளது! -அகிலேஷ் யாதவ்

சென்ராயப் பெருமாள் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

SCROLL FOR NEXT