தமிழ்நாடு

மே 28, 30-இல் பெங்களூா்-ஹவுரா, தானாப்பூா் சிறப்பு ரயில் இயக்கம்

DIN

பெங்களூரிலிருந்து ஹவுரா, தானாப்பூருக்கு மே 28, 30-ஆம் தேதிகளில் ஒரு வழி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:பெங்களூரிலிந்து மே 28-ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும் ஒரு வழி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06569) மறுநாள் காலை 11.45 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா சென்றடையும்.

இந்த ரயில் ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா, ராஜமுந்திரி, துவ்வாடா (விசாகப்பட்டினம்), ஒடிஸா, வழியாக இயக்கப்படும்.

பெங்களூரிலிருந்து மே 30-ஆம் தேதி காலை 6.50 மணிக்கு புறப்படும் ஒரு வழி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06567) மறுநாள் காலை 8 மணிக்கு பிகாா் மாநிலம் தானாப்பூா் சென்றடையும்.

இந்த ரயில் ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடுா், விஜயவாடா, வாராங்கல், நாக்பூா், ஜபல்பூா், பிரயாக்ராஜ் சியோகி, தீனதயாள் உபாத்யாயா, பக்ஸாா், ஆரா வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT