தமிழ்நாடு

தனியார் பேருந்தின் மீது லாரி மோதி விபத்து: கிளீனர் பலி!

வாலாஜாபேட்டை அருகே நள்ளிரவில் தனியார் பேருந்தின் மீது லாரி மோதிய விபத்தில் கிளீனர் பலியானார்.

DIN

வாலாஜாபேட்டை அருகே நள்ளிரவில் தனியார் பேருந்தின் மீது லாரி மோதிய விபத்தில் கிளீனர் பலியானார்.

வாலாஜாப்பேட்டை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் மீது பஞ்சர் ஆகி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பேருந்தின் பின்புறம் பார்சல் லாரி மோதி திங்கள் கிழமை இரவு விபத்து ஏற்பட்டது.

தனியார் பேருந்தின் டயர் மாற்றுவதற்காக பேருந்து அடியில் இருந்த காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கிளீனர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து வாலாஜாபேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

SCROLL FOR NEXT