5 லிட்டர் பச்சை பால் விலையுயர்வு ஏன்? ஆவின் விளக்கம்!
ஆவின் 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆவின் 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவனம் கூறியது,
ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் பச்சை நிற பால் பாக்கெட் பொது மக்களுக்கு ஒரு லிட்டர் ரூ.44 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், வணிக நிறுவனத்திற்காக விற்பனை செய்யப்படும் 5 லிட்டர் பால் ரூ.210-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், வணிக நிறுவனத்திற்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையிலேயே வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ரூ.10 உயர்த்தப்பட்டு, 5 லிட்டர் பாலின் விலை ரூ.220-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.