முகப்பு
தமிழ்நாடு

போகி கொண்டாட்டம்: புகைமூட்டமாகக் காட்சியளிக்கும் சென்னை!

பழைய பொருள்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருவதால் சென்னை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. 

Updated On : 14 ஜனவரி, 2023 at 8:29 AM
புகை மூட்டமாகக் காட்சியளிக்கும் சென்னை
பகிர்:

போகி பண்டிகையையொட்டி மக்கள், பழைய பொருள்களை எரித்து வருவதால் சென்னை முழுவதும் புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது. 

பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற அடிப்படையில் சென்னையில் மக்கள் பழைய பொருள்களை எரித்து போகி கொண்டாடி தைத்திருநாளை வரவேற்கின்றனர்.

இதனால், சென்னை முழுவதும் புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்துள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.