கடலூர் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை!
கடலூர் மாவட்ட மீனவர்கள் திங்கள்கிழமை பிற்பகல் முதல் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என கடலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தெரிவித்தார்.
நெய்வேலி: கடலூர் மாவட்ட மீனவர்கள் திங்கள்கிழமை பிற்பகல் முதல் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என கடலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
தமிழக வங்கக்கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும், கடல் காற்றானது மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும் என வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது.
Advertisement
ஆகவே, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் திங்கள்கிழமை பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.