முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவிக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனை செல்லும்: உயர்நீதிமன்றம்

மறைந்த முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Updated On : 20 நவம்பர் 2023, 12:38 pm IST
கோப்புப்படம்
பகிர்:

மறைந்த முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வதிக்கப்பட்டிருந்தது. 2000-ல் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையிட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது அவர் 2015-ல் காலமானார்.

இந்த நிலையில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

Advertisement

Advertisement

அதில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.  அத்துடன் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.