மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.360 உயர்வு
சென்னையில் இன்று(திங்கள்கிழமை) மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660-க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ரூ.88க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
பணவீக்கம் மற்றும் சர்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தரவர்க்க குடும்பத்தினர் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.