ஐஸ் பிரியாணி... சின்னத்திரை பிரபலம் பகிர்ந்த விடியோ!
பிரியாணிக்கென தனி ருசியும், ரசிகர் பட்டாளமும் உள்ளதைப் போல ஐஸ் பிரியாணியும் அதிக வரவேற்பு கொண்டது.
சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த ஐஸ் பிரியாணி என்று பழைய சோற்றை உண்ணும் விடியோவைப் பகிர்ந்துள்ளார்.
பிரியாணியில் கறித்துண்டுகள், மசாலா இருப்பதைப் போன்று, அவர் பகிர்ந்துள்ள ஐஸ் பிரியாணியில் வெங்காயமும், பச்சை மிளகாயும் உள்ளன.
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் மாகாபா ஆனந்த். பண்பலை தொகுப்பாளராக இருந்த இவர், படிப்படியாக முன்னேறி தற்போது பல தொலைக்காட்சி முன்னணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
Advertisement
Advertisement
சூப்பர் சிங்கர்ஸ், அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் இவர் தொகுத்து வழங்கி மிகப்பெரிய வரவேற்ப்பைப் பெற்றவை. யரையும் புண்படுத்தாத வகையில் நகைச்சுவை ததும்ப கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதால், இவருக்கு ரசிகர்கள் அதிகம்.
சின்னத்திரையில் இவரைப் பின்பற்றி தற்போது பல திறமையாளர்கள் மக்கள் மனங்களைக் கவர்ந்து வருகின்றனர்.
சமுகவலைதளத்தில அவ்வபோது புகைப்படங்கள், விடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுடன் கலந்துரையாடும் மாகாபா ஆனந்த், இம்முறை ஐஸ் பிரியாணி எனக் குறிப்பிட்டு ஒரு விடியோவைப் பகிர்ந்துள்ளார்.
பழைய சோற்றில் தயிர் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாயுடன் பிசையும் விடியோவை வெளியிட்டுள்ளார். பிரியாணிக்கென தனி ருசியும், ரசிகர் பட்டாளமும் உள்ளதைப் போல பழைய சோறும் அதிக மசுவு கொண்டது என்பதைக் குறிப்பிடும் வகையில் இதற்கு ஐஸ் பிரியாணி எனப் பெயரிட்டுள்ளார்.
வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற ஐஸ் பிரியாணியை சாப்பிடுவது உடலுக்கு நல்லது, குடும்பஸ்தர்களுக்கும் நல்லது என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.