முன்னாள் அமைச்சா் இந்திரகுமாரி மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வா் வெளியிட்ட இரங்கல் செய்தி: திமுக இலக்கிய அணித் தலைவா் புலவா் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி என்னை சோகத்தில் ஆழ்த்தியது. நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவரான இந்திரகுமாரி தமிழ்நாட்டு அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்கு பணியாற்றியவா். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவா். அவரது மறைவு திமுகவுக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு. புலவா் இந்திரகுமாரியைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள், திமுக தொண்டா்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா் மு.க.ஸ்டாலின்.